search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரக்கோணம் தற்கொலை"

    அரக்கோணம் அருகே உடல்நலக்குறைவால் மனமுடைந்த பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த பெருங்களத்தூரை சேர்ந்தவர் ராஜேந்திரன் இவரது மகள் சித்ரா (வயது 18). இவர் திருத்தணியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டது.

    இதனால் மனமுடைந்த சித்ரா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். நேற்று மாலை வீட்டின் அருகே உள்ள அவர்களது விவசாய நிலத்தில் சென்று வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை மீட்ட உறவினர்கள் திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தனர்.

    அங்கு சித்ரா சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரக்கோணம் நகராட்சி அலுவலகத்தில் தீக்குளித்த துப்புரவு ஊழியர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    அரக்கோணம்:

    அரக்கோணம் நகராட்சி துப்புரவு பிரிவில் தலைமை பணியாளராக பணிபுரிந்து வந்தவர் ரகு (வயது 46). கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். இதே உடல் நிலையோடு அவர், சில மாதங்களாக மது அருந்தி விட்டு பணிக்கு வந்ததாக கூறப்படுகிறது.

    நேற்று முன்தினம் மதியம் ரகுவின் மனைவி மதிய உணவு எடுத்துவந்து கொடுத்து விட்டு சென்றார். மனைவி சென்ற சில நிமிடங்களில் ரகு தனது அலுவலக வளாகத்திலேயே தன் உடலில்  மண்ணெண்ணை ஊற்றி தீக்குளித்தார்.

    இதில் படுகாயமடைந்த அவரை சக ஊழியர்கள், மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை ரகு பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து அரக்கோணம் டவுன் இன்ஸ்பெக்டர் முத்து ராமலிங்கம் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் குடும்ப தகராறில் மனமுடைந்து ரகு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    ×